மொரிஷியஸில் உள்ள போர்ட் லூயிஸ் துறைமுகத்தை ஐஎன்எஸ் சுனைனா வந்தடைந்தது.
INS சுனைனா 20 ஜூன் 2024 அன்று போர்ட் லூயிஸ், மொரிஷியஸ் சென்றடைந்தது. கப்பல் ஜூன் 24, 2024 வரை அங்கேயே இருக்கும்.
மொரிஷியஸ் கடலோரக் காவல்படை கப்பலான பர்ராகுடாவுடன் இந்தக் கப்பல் கடல் கண்காணிப்பில் ஈடுபடும்.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் கூட்டு சிறப்பு ரோந்து மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்திய கடற்படையின் உறுதிப்பாட்டை இந்த விஜயம் எடுத்துக்காட்டுகிறது.
அங்கு வந்த ஐஎன்எஸ் சுனைனா கப்பலுக்கு மொரிஷியஸ் படையின் இசைக்குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போர்ட் லூயிஸ் துறைமுகத்திற்கு விஜயம் செய்துள்ள கப்பல், தொழில் மற்றும் சமூகப் பணிகள், மொரிஷியஸ் துறைமுக ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ முகாம் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி, போர்ட் லூயிஸ் நகரில் மொரீஷியஸின் பாரகுடா மற்றும் ஐஎன்எஸ் சுனைனா கப்பலில் கூட்டு யோகா அமர்வு நடைபெற்றது.
இதில் இந்திய கடற்படை மற்றும் மொரீஷியஸ் தேசிய கடலோர காவல்படையினர் கலந்து கொண்டனர். இந்த கப்பல் இன்று பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் சுனைனாவின் மொரிஷியஸ் பயணம், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.