லெபனானில் வசிக்கும் சவூதி மக்கள் உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் – காசா போர் 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் காசாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது. இதனால் லெபனான் முழுவதும் போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், சவுதி குடியுரிமை பெற்ற லெபனானில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு சவுதி அரேபியா அரசு அறிவுறுத்தியுள்ளது.