வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்திற்கு ஊக்கமாக உருவான மாணவர் போராட்டத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்றும், இந்தியாவுடன் வங்கதேசத்தின் உறவுகளில் பிரச்சினைகள் இருப்பதாக அந்த நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கூறியுள்ளார்.

நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற முகமது யூனுஸ் பின்னர் பேசிய போது,

“வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே உறவில் சற்று பிரிவுகள் உள்ளன. இதற்கான முக்கிய காரணம், வங்கதேசத்தில் அரசியல் மாற்றத்திற்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை.”

மேலும், வங்கதேசத்தில் பிரச்சினைகளை உருவாக்கிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் இருப்பதாகவும், இந்தியா அவருக்கு ஆதரவாக உள்ளது என்பதும் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதோடு, வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டம் ஒரு இஸ்லாமிய இயக்கம் என்ற போலி தகவல்கள் இந்தியாவில் பரப்பப்பட்டுள்ளதாலும், பிரச்சினை மேலும் மோசமாக்கப்பட்டது.

சார்க் அமைப்பும் இந்தியாவின் அரசியல் முனைப்புக்கு ஏற்றவாறு செயல்படவில்லை என்பதால், அந்த அமைப்பின் செயல்பாடு சீர்குலைந்துள்ளது. இதனால், பிராந்திய ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சுதந்திரமான, நேர்மையான மற்றும் அமைதியான பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இதனால், 12.6 கோடி வங்கதேச மக்களுக்கு நம்பிக்கை உருவாகியுள்ளது என முகமது யூனுஸ் தெரிவித்தார்.

Facebook Comments Box