சோயாபீன்ஸ் விவகாரம்: விரைவில் சீன அதிபருடன் சந்திப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சோயாபீன்ஸ் பிரச்சினை குறித்து விரைவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர்,

“சீனா பேச்சுவார்த்தைக்காக மட்டுமே நம்மிடமிருந்து சோயாபீன்ஸ் வாங்காமல் இருப்பதால், நம் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வரிகளால் நாம் பெரும் தொகை பணம் சம்பாதித்துள்ளோம். அதிலிருந்து ஒரு பகுதியை விவசாயிகளுக்காக பயன்படுத்தப் போகிறோம்.

நான் எப்போதும் நம் விவசாயிகளை கைவிட மாட்டேன்.

தூக்கத்தில் இருக்கும் ஜோ பைடன், சீனாவுடனான நம் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அவர்கள் நம் பண்ணை உற்பத்திகளில் பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க ஒப்புக்கொண்டிருந்தனர், குறிப்பாக சோயாபீன்ஸ். எல்லாம் நன்றாக நடைபெறும். நான் நம் தேசபக்தர்களை நேசிக்கிறேன்; ஒவ்வொரு விவசாயியும் அப்படித்தான். நான்கு வாரங்களில் சீன அதிபரை சந்திக்க உள்ளேன். சோயாபீன்ஸ் முக்கிய விவாதமாக இருக்கும். சோயாபீன்ஸ் மற்றும் பிற பயிர்களை மீண்டும் வளம் பெறச் செய்வோம்” எனக் கூறினார்.

முன்னதாக, சீன பொருட்களுக்கு 145% வரை வரி உயர்த்த ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார். அதற்கு பதிலடி நடவடிக்கையாக சீனா பல முயற்சிகளை மேற்கொண்டது. அதில் முக்கியமானது, அமெரிக்க விவசாய ஏற்றுமதியின் முதன்மைப் பொருளான சோயாபீன்ஸ் உட்பட பல பண்ணை பொருட்களின் இறக்குமதியை குறைத்ததே.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் சீனா அமெரிக்க சோயாபீன்களை வாங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

Facebook Comments Box