பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டாமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரித்தானிய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த கெய்ர் ஸ்டாமருக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான விரிவான மூலோபாய நட்பை அனைத்து முனைகளிலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், தனது பதவிக்காலத்தில் இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான உறவை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.