கெய்மி புயல் தாக்கியதில் 2 பேர் பலி… சுமார் 6 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…

0

கெய்மி புயல் காரணமாக சீனாவின் 12 நகரங்களில் 40 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தைவானில் கெய்மி புயல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் புயல் பாதித்தது. அதன்படி சீனாவின் புஜியான் மாகாணத்தில் மணிக்கு 118 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடந்தது. அப்போது மழை கொட்டியது. குறிப்பாக, சீனாவின் 12 நகரங்களில் 40 செ.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 6 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. எனவே வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு மீட்புக்குழுவினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இதற்காக அங்கு பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here