பாரீஸ் நகரில் ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்திய விவகாரத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பாரிஸில் ஒலிம்பிக் திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், கலவரக்காரர்கள் பிரதான ரயில் பாதையை துண்டித்து, மின் கம்பிகளுக்கு தீ வைத்தனர்.
இதனால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.