வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

0

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்காக பாரிஸ் சென்றிருக்கும் முகமது யூனுஸ், விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

இந்நிலையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்கதேச ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முஹம்மது யூனுஸ் போராட்டக்காரர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் விலகி அமைதியைப் பேணுமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக தலைநகர் டாக்காவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராணுவ தளபதி வக்கார்-உஸ்-ஜமான், நாளை (இன்று) பதவியேற்பு விழாவை நடத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் முஹம்மது யூனுஸ் பிற்பகல் 2:10 மணிக்கு மட்டுமே நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால அரசாங்க ஆலோசனைக் குழு 15 “இடைக்கால அரசாங்கத் தலைவர் பேராசிரியர் முஹம்மது யூனுஸுக்கு ஆயுதப் படைகள் அனைத்து ஆதரவையும் வழங்கும்” என்று அவர் கூறினார்.

இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 2 நாட்கள் ஆகியும் போராட்டக்காரர்களின் வன்முறை அங்கு நிற்கவில்லை. அவாமி லீக் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், குடும்பத்தினர் என 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இந்த வன்முறையில் 50 போலீசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here