மன் கடற்கரை அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு…

0

ஏமன் கடற்கரை அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தாலும், ஏமனுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எத்தியோப்பியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரை அருகே எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் மொத்தம் 27 பேர் பயணம் செய்ததாகவும், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 14 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஐ.நா. இடம்பெயர்வு ஏஜென்சியின் கூற்றுப்படி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here