கிழக்கு சூடானில் அணை உடைந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

0

கிழக்கு சூடானில் அணை உடைந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு சூடானில் உள்ள அர்பாத் அணை நேற்று இடிந்து விழுந்ததில் 60 பேர் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.

இதுகுறித்து, செங்கடல் மாநில நீர் கழக தலைவர் உமர் இசா தாஹிர் கூறுகையில், ”அணை உடைந்ததால், தலைநகர் போர்ட் சூடான் அருகே உள்ள கிராமங்கள் அழிந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

அணை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உடனடி மீட்பு பணிகள் தேவை. தண்ணீரில் தப்புபவர்களுக்கு தேள், பாம்பு கடி ஏற்படும் அபாயம் உள்ளது.

இதற்கிடையில் பெய்த கனமழையால் அணை இடிந்து, வண்டல் மண்ணுடன் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள கிராமங்கள் அழிந்தன. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்ட் சூடானுக்கு வடக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அணையின் நீர்த்தேக்கம் 25 மில்லியன் கனமீட்டர் கொள்ளளவு கொண்டது. இது நகரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here