WhatsApp Channel
மத அல்லது தனிப்பட்ட விமர்சனங்களை பிரசாரமாக பயன்படுத்தக் கூடாது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக தேர்தல் ஆணையர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. லோக்சபா தேர்தலை நடத்த நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம். இந்த ஆண்டின் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
மாநில எல்லைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும். தேர்தல் முடியும் வரை வன்முறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சில மாநிலங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தேர்தலில் பணம் முக்கிய காரணியாக உள்ளது. ஓட்டுக்குப் பணம் பெறுவதும் கொடுப்பதும் குற்றம்.
நகை, சேலை போன்ற எந்தப் பொருளையும் இலவசமாகக் கொடுப்பது குற்றம். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். ஜாதி, மத விமர்சனங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும்.
அனைத்து விளம்பரங்களையும் நம்பகமான செய்தியாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சிறார்களை தேர்தல் பணிக்கும், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்தக் கூடாது. அரசியல் கட்சிகள் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது. நட்சத்திர பேச்சாளர்களும் கண்ணியமாக பேச வேண்டும். சிவப்பு கோட்டை ஒருபோதும் கடக்கக்கூடாது. இவ்வாறு ராஜீவ் குமார்.
Discussion about this post