முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனைத்து இந்து இயக்கங்களையும் அழைக்க வேண்டுகோள்

0

இந்து முன்னணி ஏற்பாடு செய்யும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தமிழகத்தில் செயல்படும் அனைத்து இந்து அமைப்புகளும் அழைக்கப்பட வேண்டும் என, இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் அமைப்புக்குழு பொதுச் செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது சித்தாந்த அடிப்படையில் பல்வேறு கஷ்டங்களும் வேதனைகளும் இந்துக்கள் மீது நிகழ்கின்றன. குறிப்பாக, இந்து சமுதாயம் சொல்ல முடியாத அளவிலான துன்பங்களை அனுபவிக்கிறது. இந்த நிலைமைக்கு காரணமாக திராவிட மாடல் அரசு தான்,” என கூறியுள்ளார்.

மேலும், “முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருப்பதை உலகிற்கு காண்பிக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். இவ்வாசையில், இந்து முன்னணி அனைத்துக் கட்சி தலைவர்களையும் மரியாதையாக அழைத்தது வரவேற்கத்தக்கது. தற்போதைய சூழலில், இந்துக்களுக்கு ஆபத்துகள் வரக் கூடிய நிலை உள்ளது. ஆகையால் கட்சி வேறுபாடுகளை தாண்டி, அனைவரும் ‘நாம் இந்துக்கள்’ என்ற ஒற்றுமையை முன்னிலைப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் எதிரிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்ற நிலையில், பெரும்பான்மையிலுள்ள நாம் பிளவு ஏற்பட்ட நிலையில் இருக்கிறோம். எனவே இந்து முன்னணி, ஒவ்வொரு இந்து இயக்கங்களையும் நேரில் சந்தித்து, மரியாதையுடன் அழைப்பு விடுக்க வேண்டும்,” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here