ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கிரண் ரிஜிஜு

0

இந்த ஆண்டின் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரையிலான காலப்பகுதியில் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைக் கண்டித்துப் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா பதிலடி நடவடிக்கை மேற்கொண்டது. அந்த தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கூடியிருப்பது இது முதல்முறையாகும்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க, எதிர்க்கட்சி தலைவர்கள் தனியான கூட்டத்தொடர் ஒன்றை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது மழைக்கால கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிலவும் விதிகளின்படி, இந்த கூட்டத்தொடரில் அனைத்து முக்கியமான பிரச்சினைகளும் விவாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைத் தொடர்பாக அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.

இந்த அமர்வில், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை முக்கியமான விவாத தலைப்புகளாக அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்கம் குறித்த தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here