அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0

அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை

அமராவதி அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், ஆற்றில் உபரிநீர் வெளியேறும் சாத்தியம் இருப்பதால், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. தா. கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:

“திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூன் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு 85.11 அடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எந்த நேரத்திலும் உபரிநீர் திறக்கப்படும் நிலை உள்ளது. எனவே, ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும், மேலும் 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். சனிக்கிழமை காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 625 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. வழமையாக, நீர்மட்டம் 88 அடியை எட்டும் போதே உபரிநீர் வெளியேற்றப்படும்.

அணையில் இருந்து துவங்கி கரூர் மாவட்ட எல்லை வரை அமராவதி ஆறு பாய்ந்து செல்லும் காரணத்தால், பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க இந்த எச்சரிக்கை முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here