‘திராவிடம் இல்லா தமிழகம்’ பிரச்சார இயக்கம்: அர்ஜூன் சம்பத் தகவல்

0

‘திராவிடம் இல்லாத தமிழகம்’ என்ற பிரச்சார இயக்கம் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கப்படுவதாக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார்.

இந்துமக்கள் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நேற்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி நடக்க உள்ள முருக பக்தர் மாநாட்டுக்கு தமிழக அரசு அனுமதி வழங்காமல், பலவிதமான தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிகழ்வு, தமிழகத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வரும் என்றார்.

‘திராவிடம் இல்லாத தமிழகம்’ என்ற தலைப்பில், ஹிந்து வாக்கு வங்கியை கட்டமைக்கும் நோக்கில் ஜூலை 20-ஆம் தேதி ஒரு பிரச்சார இயக்கம் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஆனால் இந்த கூட்டணியில் பிளவு ஏற்படுத்த திமுக குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாகவும், அன்றாடம் பாலியல் தொல்லைகள், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் விமர்சித்தார். மேலும், நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் முதல் 6 இடங்களைப் பிடித்தது மிகுந்த பெருமையை அளிக்கின்ற செய்தி என்றும் கூறினார்.

தவெக் கட்சியைத் தலைமையிலான நடிகர் விஜய், திமுகவின் ‘ஏ’ அணி என வர்ணித்து, பழனிசாமி மீண்டும் முதல்வராக வரக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம் என தெரிவித்தார். எனினும், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

அந்நேரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் குருமூர்த்தி மற்றும் மாநில துணைத்தலைவர் பாலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here