சென்னையின் நவீன சின்னமாக திகழும் கத்திப்பாரா மேம்பாலம், அனைவரையும் ஆச்சரியப்படவைக்கும் ஒரு இன்ஜினியரிங் சாதனையாக உருவெடுத்து வருகிறது. இந்தப் பணிகள் காலதாமதமின்றி முடிக்கப்பட வேண்டும் என்றும், விரைவில் சென்னை மக்களின் நகரப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்றும் நான் ஆலோசனை வழங்கினேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:
“சென்னையின் முக்கிய அடையாளமாக கத்திப்பாரா மேம்பாலத்தை உருவாக்கியவர், முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி. அந்த மேம்பாலத்தின் மேல், இந்திய அளவில் முதன்முறையாக மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டேன். ஒரு இன்ஜினியரிங் அதிசயமாகக் கருதப்படும் இந்த மேம்பாலம், திட்டமிட்ட நேரத்தில் நிறைவடைய வேண்டும் என்றும், சென்னை மக்களின் பயண அனுபவத்தைச் சீராக்க வேண்டும் என்பதற்காக தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினேன்,” என பதிவிட்டுள்ளார்.