அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் புகார்

0

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை அவமதிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பியதற்காக, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, அதிமுகவினர் விருதுநகர் எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை கேலி செய்யும் வகையில், அவரது கார்ட்டூன் படம் ஒன்று திமுகவின் எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இதனைக் கண்டித்து, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட தலைவர் விஜயகுமரன், மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் தனித்தனியாக முறையிட்டனர்.

அவர்கள் அளித்த புகாரில், பழனிசாமியை அவதூறாகக் காட்டும் வகையில் அவரது மரியாதைக்கும், பதவிக்கும் இடையூறாக இருப்பதுடன், அரை நிர்வாணமாகக் காணப்படும் கேலிச் சித்திரம் ஒன்றை பொய்யான தகவலுடன் இணைத்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது அவரின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், திட்டமிட்ட சதி செயலாகவும் கூறப்பட்டது.

மேலும், அதிமுக கட்சி கொடியை இழிவுபடுத்தும் வகையிலும், அதனை தவறாக பயன்படுத்தி குறித்த சித்திரம் வெளியிடப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டது.

இந்த பதிவை வெளியிட்ட திமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here