மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கும் பணிகள் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.
6 மாதங்களுக்கு செல்லும் இந்த இலவச பயண டோக்கன்கள், புதிய பயனாளிகளுக்கு வழங்கப்படுவதுடன், ஏற்கனவே பெற்றவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தலும் செய்யப்படும்.
அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பேருந்து நிலையங்களில், தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த சேவைகள் வழங்கப்படும். இதற்குப் பிறகு, வழக்கமாகவே அந்தந்த மண்டல அலுவலகங்களில் சேவை தொடரும்.
பயண டோக்கன் பெற, இருப்பிடம் நிரூபிக்க குடும்ப அட்டை மற்றும் வயதை உறுதிப்படுத்த ஆதார், ஓட்டுநர் உரிமம், கல்விச்சான்றிதழ் அல்லது வாக்காளர் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் இரண்டு வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.