அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ந் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அரசு அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமசபைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது. இதற்கான தயாரிப்புகள் அனைத்து ஊரக பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவுகள் பற்றிய அறிக்கையை கூட்டத்தில் படித்து ஒப்புதல் பெற வேண்டும்.

கூட்டம் காலை 11 மணிக்கு நடத்தப்பட வேண்டும், மக்கள் அனைவரும் பங்கேற்கக் கூடியவாறு நேரம், இடம் முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும். மதச்சார்புள்ள எந்த இடத்திலும் கூட்டம் நடத்தக் கூடாது.

கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • சுத்தமான குடிநீர் விநியோகம்
  • வரி சேவை
  • இணைய வழி மனைப்பிரிவு
  • கட்டிட அனுமதிகள்
  • சுயசான்று அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவு
  • தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒற்றைச்சாளர முறையில் 2,500 சதுரஅடிக்கு குறைவான பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கான கட்டிட அனுமதி

மேலும்,

  • தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
  • தூய்மை பாரத இயக்கம்
  • ஜல்ஜீவன் திட்டம்
  • பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு பொதுக் கட்டிடங்களில் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம்

இதுபோன்ற திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை செய்யப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Facebook Comments Box