‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கியது மத்திய அரசு: ராணுவ தளபதி நெகிழ்ச்சி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது முப்படைகளுக்கு மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்ததால் தான் களத்தில் முழு உற்சாகத்துடனும், தைரியத்துடனும் செயல்பட முடிந்ததாக ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்தார்.

சென்னையில் ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ ஆராய்ச்சி மையமான ‘அக்னிஷோத்’ தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து, மையத்தை தொடங்கி வைத்த அவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:

ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அடுத்த நாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்தில் பதிலடி நடவடிக்கை எடுக்க முழு ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு அரசிடம் இருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டதால் ராணுவ தளபதிகள் தங்கள் விருப்பப்படி, முழு நம்பிக்கையுடனும் செயல்பட்டனர்.

திட்டமிட்ட 9 இலக்குகளில் 7 முக்கிய இடங்களை முழுமையாக அழித்து, பெரும்பான்மையான தீவிரவாதிகளை அகற்றியுள்ளனர். ‘ஆபரேஷன் சிந்தூர்’ முழு தேசத்தையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கை ஆனது. இது ஒரு சதுரங்க விளையாட்டுபோல் இருந்தது; எதிரியின் அடுத்த நகர்வுகளை கணித்து செயல்பட்டனர்.

2019-ல் நடைபெற்ற உரி, பாலகோட் தாக்குதல்களிலிருந்து வேறுபட்ட வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரியின் ஆழமான பகுதிக்குள் சென்று தாக்குதல் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனால் பாகிஸ்தான் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாக உள்ளது என அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

Facebook Comments Box