திருச்சி டிஐஜி வருண்குமார் உட்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த நான்கு அதிகாரிகளில் ஒருவராக திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளார்.

இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்படுவதாவது: ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார், ஊர்க்காவல் படையின் டிஜிபி பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆயுஷ் மணி திவாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்தின் (சென்னை) கூடுதல் காவல் இயக்குநராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீ, சென்னை மாநில குற்றப்பதிவு பணியகத்தின் ஐஜி பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார். திருச்சி டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ், சிபிசிஐடி டிஐஜி பதவிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments Box