“என் முதல் எதிரி தான் சாதி!” – கமல்ஹாசன் பேச்சு திருமாவளவன் பிறந்தநாள் விழாவில்
திருமாவளவன் பிறந்த நாள் விழாவில், சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான் நாம் ஒரே மக்களாக, ஒரே தேசமாக இணைய முடியும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
இன்று 63-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின். இதையொட்டி, “மதச் சார்பின்மை காப்போம்” என்னும் கருப்பொருளை மையப்படுத்தி சிறப்பு நிகழ்வு நேற்று சென்னை காமராஜர் அரங்கில் ஒருங்கிணைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் விழா தொடங்கியது. சிறுமி பூ கொடுத்து திருமாவளவனை வரவேற்றார் மேடைக்கு வந்தபோது. அவரது வாழ்க்கை வரலாறு குறித்து ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆவணப்படமும் வெளியிடப்பட்டது.
அடுத்து, “மதச்சார்பின்மை காப்போம்” தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன், இயக்குநர் கே.பாக்யராஜ், அருண் பாரதி, இளைய கம்பன், புனிதஜோதி, லாவரதன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அதே தலைப்பில் ஊடக அரங்கமும் நடைபெற்றது.
இதையடுத்து, வாழ்த்தரங்கில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் ஐ.லியோனி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
கமல்ஹாசன் பேசியதாவது:
திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானதல்ல. இந்தியாவின் பலவீனம் தான் சாதி பிரிவினைகள். நாம் ஒரே மக்களாக, ஒரே தேசமாக இணைய முடியும் சாதிய தடைகள் நீக்கப்பட்ட பின்புதான். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது எளிதல்ல. அப்படிச் செய்பவர்கள் அற்புதமான மனிதர்கள், ஆச்சரியத்துக்குரியவர்கள், அடிக்கடி வரமாட்டார்கள்.
அரசியல் வேண்டுமா, ஆதாயம் வேண்டுமா என்று கேட்டால் அரசியலையே தேர்ந்தெடுப்பவர் திருமாவளவன். அவரைப் பார்த்து நான் வியக்கிறேன். கட்சியை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் எனக்குத் தெரியும், நான் கட்சி ஆரம்பித்தவன் என்பதால். ஆனால், அவர் அதை 40 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டார். என் சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்கிறார்கள். என் முதல் எதிரி தான் சாதி.
ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கிறது திருமாவளவன் உருவெடுத்த பிறகுதான் என்று நான் நினைக்கிறேன். அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடுபவன் ஜனநாயக போராளி. எல்லோரையும் சேர்த்ததே திராவிடம். சிந்து நதி முதல் வைகை நதி வரை அது பரவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இரவு 12 மணி ஆனபோது வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திருமாவளவன் கேக் வெட்டி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வழங்கினார். வரவேற்புரை ஆற்றினார் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.
விழாவுக்கு விசிக பொதுச்செயலாளர் ம.சிந்தனைச் செல்வன், எம்எல்ஏ-க்கள் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் மு.பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன், தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், முதன்மைச் செயலாளர் ஏ.சி. பாவரசு, 190-வது வட்ட செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ், மா.வீரக்குமார், தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்றனர்.