ராமதாஸ், அன்புமணி அரசியல் நாடகத்தில் ஈடுபட்டுள்ளனர் – காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை குற்றச்சாட்டு

வன்னிய சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மகள் குரு. விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி வன்னியர் மக்களை ஏமாற்றி, சண்டை போட்டுக்கொள்வது போல் நாடகமாடி வருகின்றனர். இவர்களின் சண்டை வன்னியர் சமூகத்தின் நலனுக்காக அல்ல; பணம் மற்றும் பதவிக்காக மட்டுமே நடக்கிறது. இதனால் கட்சிக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இது முழுக்க அரசியல் நாடகம் என்று அவர் குற்றம் சுமத்தினார்.

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் ராமதாஸ் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் பொருள், கட்சியில் ஒருவர் குற்றம் செய்திருந்தால் உடனே நீக்கப்பட்டிருப்பார்கள்; ஆனால் அன்புமணியை, ராமதாஸ் அவரை நீக்கவில்லை. மாறாக பிறந்தநாள் விழாக்களில் கேக் ஊட்டும் நிகழ்ச்சிகளை நடாத்தி கொண்டுள்ளனர்.

விருதாம்பிகை மேலும் கூறியதாவது: ராமதாஸ் அரசியல் நடவடிக்கைகள் வன்னியர் மக்களுக்கு தீங்கு செய்கின்றன. இதனால் வட மாவட்டங்களில் பாமக 2016-ல் 15% வாக்கு பெற்றிருந்தாலும், இன்றைக்கு அது 2% க்கு குறைந்துள்ளது. இந்த இருவரின் சுயலாப செயல்கள் வன்னியர் மக்களை தவறான பாதையில் நடத்துகின்றன.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி திருச்சியில் கூறியதாவது, வன்னியருக்கான 10.5 இடஒதுக்கீடு முடிவடைந்துவிட்டது. இதன் மூலம், காடுவெட்டி குருவின் வழியில் வன்னியர் சமூகத்திற்கு தனிப்பட்ட கட்சியை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். அந்த கட்சி எதற்கும் ஆதரவாக இருக்கிறதோ, அந்தக் கட்சியை எதிர்வரும் தேர்தலில் ஆதரிப்போம் என்று அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box