சென்னைக்கு உள்புக அனுமதி இல்லை என பாஜக நிர்வாகி நெடுங்குன்றம் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை, உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சென்னை நகர எல்லைக்குள் நுழைய முடியாது என பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் கமிஷனர் வழங்கிய உத்தரவை, சென்னை ஐகோர்ட் நிராகரித்தது.

பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதைக் குறிப்பிட்டு, அவரை ஏன் சென்னைக்குள் நுழைய தடையிடக் கூடாது என்பதை விளக்குமாறு கொளத்தூர் காவல் துணை கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கு சூர்யா பதிலளித்திருந்த போதிலும், ஏப்ரல் 25 முதல் ஓர் ஆண்டுக்காலம் சென்னை மாநகருக்குள் நுழைய கூடாது என காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக நெடுங்குன்றம் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அது நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறையின் நோட்டீசுக்கு முறையான விளக்கம் அளித்திருந்தும், அதை கருத்தில் கொள்ளாமல் காவல் ஆணையர் இந்த உத்தரவை வழங்கியதாகவும், எந்த காரணமும் குறிப்பிடாமல் சென்னைக்குள் நுழைய தடைவிதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Facebook Comments Box