ஆகஸ்ட் 28 அன்று, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் சென்னை மாநகராட்சியின் 10 வார்டுகளில்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:
“பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை (28.08.2025) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும்.
மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22, தேவராஜன் தெருவிலுள்ள சமுதாயக் கூடம்.
மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29, இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகே உள்ள நியாய விலைக்கடை.
இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-59, பார்க் டவுன், ஏகாம்பரேஸ்வர அக்ரஹாரம் தெருவிலுள்ள ஶ்ரீமகேஸ்வரி சபா.
திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-75, தலைமைச் செயலக காலனி 3வது தெருவிலுள்ள தலைமைச் செயலக மெட்ரிக் பள்ளி.
அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-103, அண்ணாநகர் 7வது பிரதான சாலையிலுள்ள உடற்பயிற்சிக் கூடம்.
தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-121, மயிலாப்பூர் இராயப்பேட்டை பிரதான சாலை ரங்கையா கார்டனிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. இளம் ஆண்கள் இந்திய சங்கம்.
கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-134, அசோக் நகர் பக்தவச்சலம் தெருவிலுள்ள விளையாட்டுத் திடல்.
வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152, ஆற்காடு சாலையிலுள்ள மண்டல அலுவலகம்.
ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-161, பொன்னியம்மன் கோயில் தெருவிலுள்ள ஏ.ஜி.எஸ். நிதி திருமண மண்டபம்.
அடையார் மண்டலம் (மண்டலம்-13), வார்டு-178, தரமணி சி.எஸ்.ஐ.ஆர். சாலையிலுள்ள 5சி பேருந்து நிலையம்.
இந்த 10 வார்டுகளில் முகாம்கள் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இம்முகாம்கள் நடக்கும்.
பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.”