செங்கோல் தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்கள் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில், சமாஜ்வாடி கட்சி ஒருபோதும் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை மதிப்பதில்லை என பதிவிட்டுள்ளார்.
செங்கோல் குறித்து சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி அவர்களின் அறியாமையை காட்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான இந்திய நட்பு நாடுகளின் அறியாமையை இது காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்தார். இந்தியாவின் பெருமைக்குரிய சின்னங்களில் செங்கோலும் ஒன்று என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதை அளித்து அனைத்து இந்தியர்களையும் பிரதமர் மோடி பெருமைப்படுத்தியுள்ளார் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post