பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக தூதரக வழியில் நடவடிக்கை எடுத்து மீனவர்கள் பிரச்சினையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், நாகப்பட்டினம், செருதூரை ஆகிய பகுதிகளுக்கு சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் செருதூரைச் சேர்ந்த பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், அவர்களுடைய வலை மற்றும் மீன்பிடி சாதனங்களை பறித்து சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
செல்வப்பெருந்தகை, “இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்வதைப்போல், கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களின் பொருட்களை திருடி சென்றுள்ளனர். வாழ்வாதாரத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்திய எல்லைக்குள் மீறி நுழைந்து மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்கொள்ளையர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டும்” என தெரிவித்தார்.