சீருடை பணியாளர்கள் 193 பேருக்கு அண்ணா பதக்கம்

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் 22 பேர், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 10 பேர், ஊர்காவல் படையில் 5 பேர், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தடய அறிவியல் பிரிவில் 4 அதிகாரிகள் என மொத்தம் 193 பேரின் சிறப்பான பணிகளை பாராட்டும் வகையில், ‘தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம்’ வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2024 டிசம்பர் 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 32 நோயாளிகளை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறை மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜு, தீயணைப்பு வீரர் புனிதராஜு மற்றும் கள்ளழகர் திருவிழா நடைபெற்றபோது வைகை ஆற்றில் மூழ்கிய 17 வயது சிறுவனை மீட்ட சோழவந்தான் தீயணைப்பு வீரர் ராஜசேகர் ஆகிய மூவருக்கும் ‘முதல்வரின் தீயணைப்பு சேவைக்கான அண்ணா வீரத்தீர பதக்கம்’ வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Facebook Comments Box