ஜிஎஸ்டி முதல் தமிழ் ஈழம் வரை: மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:

  • 2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற மதிமுக செயல்படும்.
  • பாஜக சதி: வெளிமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து தேர்தல் ஆதாயம் அடைய முயற்சிக்கும் பாஜகவின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.
  • அமைச்சர் பதவி நீக்கம்: ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்தாலே அமைச்சர்கள், முதல்வர்களின் பதவி பறிக்கப்படும் வகையில் கொண்டுவரப்பட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
  • ஜிஎஸ்டி இழப்பீடு: ஜிஎஸ்டி மாற்றத்தால் தமிழகத்துக்கு ஏற்பட்ட வரி இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்.
  • இலங்கை மீனவர்கள் பிரச்சனை: இலங்கை அரசின் மீனவர் விரோத செயல்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
  • விவசாயிகள் கோரிக்கை: விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்கி, தனிநபர் பயிர் காப்பீடு, வனவிலங்குகள் சட்டத்தில் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
  • நெசவாளர் சங்கம்: அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் ஒருங்கிணைத்து, ஒரு சங்க உறுப்பினர் எந்த சங்கத்திலும் வேலைவாய்ப்பு பெறும் விதி வகுக்க வேண்டும்.
  • தமிழ் ஈழம்: தமிழ் ஈழம் அமைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இதனைத் தவிர, பல பொதுமக்கள் நலத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

Facebook Comments Box