‘ஸ்ப்ரீ 2025’ திட்ட விழிப்புணர்வு முகாம் – தொழிற்சாலைகள், ஊழியர்கள் பங்கேற்பு
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க வளாகத்தில் ‘ஸ்ப்ரீ 2025’ திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய ஊக்குவிப்பது குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சென்னை மண்டல இயக்குநர் ஏ. வேணுகோபால், துணை இயக்குநர்கள் சதீஷ்குமார், ஸ்ரீனிவாசன், அம்பத்தூர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. ரவிச்சந்திரன் மற்றும் டி. சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேணுகோபால் கூறியதாவது: “‘ஸ்ப்ரீ 2025’ திட்டம், அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ம் தேதி வரை இது அமலில் இருக்கும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பங்கீடு தொகை எதுவும் கேட்கப்படாது.