செப்.23-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி., எம்எல்ஏ.,க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
செப்.23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி., எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 23.09.2025 செவ்வாய் கிழமை காலை 10.00 மணியளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
அதுபோது, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
கடைசியாக, கடந்த ஜூலை 18-ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு இப்போது எம்.பி., எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.