ஆன்மிக நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு ஜனாதிபதி – பிரதமர் மோடி இரங்கல்

0

ஹத்ராஸ் ஆன்மிக நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், இந்த சம்பவம் தனது இதயத்தை உலுக்கியது என்று குறிப்பிட்டுள்ளார். திராருபதி முர்மு அவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நாடாளுமன்றத்தில் ஹத்ரா கூட்ட நெரிசல் குறித்து பேசிய பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உத்தரபிரதேச அரசு செய்து வருவதாக கூறிய மோடி, மீட்பு பணிக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here