தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
விரைவில் நடைபெறவுள்ள பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அவரை தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர் சி.ஆர். பாட்டீல் மற்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா செயல்படுவார்கள் என்று பாஜக தகவல் வெளியிட்டுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை கவனிப்பதற்காக மத்திய அமைச்சர் பூபேந்திர் யாதவ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் தேவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக எம்பி வைஜயந்த் பாண்டா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹேல் செயல்படுவார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.