கரூர் நெரிசல் சம்பவம்: குடியரசுத் தலைவர் முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல்

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் பதிவில்,

“தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தியை அறிந்து மனம் சோகமடைந்தது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது,

“கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடையவும், அவர்களுக்கு சகிப்பாற்றும் வலிமை கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனும் உள்ளடக்கத்தில் உள்ளது.

கரூரில் நடந்த இந்த பிரச்சாரத்தில், குழந்தைகள் உட்பட 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து கரூர் நகரத்தை முழுமையாக சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box