பெ.சண்முகம் மருத்துவமனையில் சிகிச்சை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவால் அவர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவமனை டீன் சாந்தாராமன் தெரிவித்ததாவது:

“பெ.சண்முகம் நலமாக உள்ளார். தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார்” என்றார்.

Facebook Comments Box