செந்தில் பாலாஜி மீது சந்தேகம்: தவெக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

தவெக வழக்கறிஞர் அறிவழகன், மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை மற்றும் பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவில்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் திட்டம் உள்ளது. உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார். விசாரணை ஆணையம் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்கும்; புலன் விசாரணை நடத்த முடியாது.

கூட்டத்தில் செந்தில் பாலாஜியைப் பற்றிய பேச்சுக்குப் பிறகு விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாகவும், அதன் பின்னர் நெரிசல் ஏற்பட்டதாகவும் அறிவழகன் குறிப்பிட்டார். போலீஸார் வழங்கும் விளக்கம் பொறுப்பைத் தள்ளிப்போடுகிறது. தவெகவினர் போலீஸாரின் விதிகளை மீறவில்லை. நெரிசலில் உயிரிழந்தவர்களின் உடல்களை இரவிலேயே உடற்கூராய்வு செய்தது ஏன், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் இருப்பதாக அவர் கூறினார்.

Facebook Comments Box