அருணா ஜெகதீசன் விசாரணைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “அருணா ஜெகதீசன் ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் சிறப்பாக விசாரணை நடத்தியவர். அவரின் நியமனம் தவறு என்ற கருத்து கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது. காங்கிரஸ் எந்த விதத்திலும் விசாரணையை எதிர்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும், அதுபோல பேசுபவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

Facebook Comments Box