தீபாவளி பண்டிகைக்கு 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக்சிரு, ஆணையர் கஜலக்‌ஷ்மி, போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், காவல் துறை, சிஎம்டிஏ மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கூறியதாவது:

  • தீபாவளி பண்டிகைக்கு முன், நவம்பர் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள், 4 நாட்களுக்கு மொத்தம் 14,268 பேருந்துகள்
  • பிற ஊர்களிலிருந்து 6,110 சிறப்பு பேருந்துகள், மொத்தம் 20,378 பேருந்துகள்

பண்டிகை முடிந்த பின், நவம்பர் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை, சென்னை திரும்ப வசதியாக:

  • தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகள்
  • 4,253 சிறப்பு பேருந்துகள்
  • மற்ற முக்கிய ஊர்களிலிருந்து 4,600 பேருந்துகள்

    மொத்தம் 15,129 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் உள்ள 3 பேருந்து நிலையங்களிலும் இந்த சேவை கிடைக்கும். பயணிகள் முன்பதிவு செய்ய, கிளாம்பாக்கத்தில் 10, கோயம்பேட்டில் 2 மையங்கள் செயல்படும்; மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் செயல்படும். டிஎன்எஸ்டிசி செயலி மற்றும் www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார்கள் தொடர்பாக 94450 14436 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் மற்றும் புகார்கள் தொடர்பாக 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மற்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் செல்ல 150 கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Facebook Comments Box