இந்திய மக்களுக்கு சேவை, பிரதமர் மோடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்… ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்

0

இந்திய மக்களுக்கு சேவை செய்ய பிரதமர் மோடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் மாஸ்கோவில் இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்பு உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி நேற்று ரஷ்யா சென்றார். ரஷ்ய அதிபரின் பண்ணை இல்லமான நோவோ கிரயோவாவுக்குச் சென்ற பிரதமர் மோடியை அதிபர் புதின் வரவேற்றார். பின்னர், ரஷ்ய அதிபர் புதின் தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று மத்திய ஆட்சியை பிடித்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பின்னர், புட்டினுடன் பண்ணை வீட்டில் நடந்த தேநீர் விருந்தில் மோடி கலந்து கொண்டார்.

அப்போது ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது: இந்திய மக்களுக்கு சேவை செய்ய பிரதமர் மோடி தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பிரதமராக 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் 3வது முறையாக பிரதமராக இருப்பது எதிர்பாராதது அல்ல. உங்களின் பல வருட கடின உழைப்பின் பலன். உங்களிடம் உங்கள் சொந்த திட்டங்கள் உள்ளன. நீங்கள் இந்தியாவுக்காகவும் இந்திய மக்களின் நலனுக்காகவும் இலக்குகளை அடையக்கூடிய மிகவும் ஆற்றல் வாய்ந்த நபர். இந்திய மக்களுக்கு சேவை செய்ய உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளீர்கள்

அவர் கூறியது இதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here