கன்வார் யாத்திரையை முன்னிட்டு, பிராண சவான் மாதம் முழுவதும் புனித யாத்திரை செல்லும் வழியில் இறைச்சிக் கடைகளை மூட உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்வார் யாத்திரையையொட்டி, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து ஹரித்வாருக்கு பக்தர்கள் கங்கை நதியில் இருந்து புனித நீரை எடுத்துச் செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை நாளை துவங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடக்கிறது.இந்நிலையில் பக்தர்கள் காவடி எடுத்து செல்லும் பாதையில் உள்ள இறைச்சி கடைகளை மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், இந்துக்கள் அல்லாதவர்களும் உணவகங்களை வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவக உரிமையாளர் தனது பெயர் பலகையை கடையின் முன்புறத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.