பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சத்து 21 ஆயிரத்து 924 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் 12.9 சதவீதம் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுதப் படைகளை வலுப்படுத்த ரூ.1 லட்சத்து 72 ஆயிரம் கோடியும், பாதுகாப்புத் துறைக்காக உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 518 கோடியும் செலவிடப்படும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதன் மூலம் தன்னம்பிக்கை இந்தியா திட்டம் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
எல்லையோர கிராமங்களில் சாலைப் பணிகளுக்காக ரூ.6,500 கோடி செலவிடப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய பட்ஜெட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.
மக்கள் சார்பான தொலைநோக்கு பட்ஜெட் மூலம் வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்பும் வேகம் விரைவுபடுத்தப்படும் என எக்ஸ் பக்கம் தெரிவித்துள்ளது.