கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் அவகாசம் கேட்டதால், ஒத்திவைத்து அமர்வு நீதிமன்றம் உத்தரவு

0

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் கூடுதல் அவகாசம் கேட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான சயான், ஜிதின் ஜாய், அரசு வழக்கறிஞர் ஷாஜகான், சிபிசிஐடி போலீசார் மற்றும் ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆஜராகினர்.

அப்போது, ​​குற்றவாளிகளிடம் போனில் பேசியவர்கள் வெளிநாட்டில் இருப்பதால், அவர்களை கண்டுபிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாகவும், எனவே கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here