வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் கவலைக்கிடமாக உள்ளது.

மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி பேசியதாகவும், மாநில அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் ஜே.பி.நட்டா தெரிவித்தார். ​

ஜே.பி.நட்டா, கேரள அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box