பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா….

0

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு விழாவில் 206 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 தூரம் எட்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 வினாடிகளில் எறிந்து மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்று தற்போது முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here