மணிப்பூரில் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை

0

மணிப்பூரில் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மணிப்பூரில் உள்ள மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டு கடந்த நிலையிலும், ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த இனக்குழுக்களில் சிலர் ஒன்றிணைந்து தற்போது ஆயுதம் ஏந்திய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், பயங்கரவாத குழுக்களிடையே அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள டோர்பாங் பகுதியில் பயங்கரவாத குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சண்டையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட பயங்கரவாதக் குழுக்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here