புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வரும் 4 மற்றும் 5ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார்.

இந்தியா-புருனே நட்புறவின் 40வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி புருனே செல்கிறார். பிரதமர் மோடி இன்றும், நாளையும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கையாவை சந்தித்து இரு தரப்புக்கும் இடையேயான பரஸ்பர நட்புறவு குறித்து விவாதித்தார்.

புருனே பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வரும் 4 மற்றும் 5ம் தேதி சிங்கப்பூர் செல்கிறார். இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்தியா-சிங்கப்பூர் மந்திரி வட்டமேசை மாநாடு நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதில் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Facebook Comments Box