WhatsApp Channel
அயோத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9, 2019 அன்று, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. கட்டுமானப் பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 5, 2020 அன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
ராமர் சிலை வைக்கப்படும் கருவறை நிறைவடைந்தது. இந்நிலையில், ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை ராமர் கோயிலுக்குள் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்களின் புகைப்படங்களை இன்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில், மின் விளக்குகள் மற்றும் இணைப்பு பணிகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளன. “நான் உங்களுடன் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்” என்று X சமூக ஊடகங்களில் கூறினார்.
கடந்த அக்டோபரில், கோயிலின் தரைப்பகுதியை விலையுயர்ந்த கற்களால் அழகுபடுத்தும் புகைப்படங்கள் பகிரப்பட்டன.
ஜனவரி 22-ம் தேதி மதியம் 12.45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் சாமியார்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post