WhatsApp Channel
புத்தாண்டை முன்னிட்டு மூலவர் தங்க கவசத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் புத்தாண்டு அன்று வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) புத்தாண்டை முன்னிட்டு, பிள்ளையார்பட்டி கோயிலில் பக்தர்களுக்கு தேவையான முன்னேற்றப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்கில புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்களை ஏற்றிச் செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பிள்ளையார்பட்டிக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
Discussion about this post