சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்
இன்று (22-06-25, ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு
தமிழகம் மட்டுமல்ல, மொத்த பாரதத்துள்ள இந்து துரோகிகளை, விரோதிகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது
அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து இந்து சமுதாயம் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது
இப்போதும் சில எதிரிகள் இந்த மாநாட்டை தடுக்க ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கலாம்
நாம் முருக பக்தர்கள் வெற்றிகரமாக இன்றைய மாநாட்டில் சந்திக்க உள்ளோம்
உணவு உட்கொள்ளாமல் சஷ்டி விரதமிருந்து சண்முகனை காண்பவர்கள் நாம்
பாதயாத்திரையாக சென்று தண்டாயுதபாணியை தரிசிப்பவர்கள் நாம்
ஒரு படை வீட்டிற்கே இத்தனை விரதங்களை, சிரமங்களை தாண்டி தான் முருகனை தரிசிக்கிறோம்
நாளையோ ஆறுபடை வீட்டைச் சார்ந்த முருகர்கள் நம்மை ஆசிர்வதிக்க தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள்
முருக பக்தர்களாகிய நாம் எந்தத் தடை வந்தாலும் அனைத்தையும் தாண்டி அறுபடை முருகர்களை தரிசிக்க மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு குடும்பத்துடன் வரவேண்டும்
மதுரை – அன்னை மீனாக்ஷியின் மண்
சொக்கநாதன் திருவிளையாடல் புரிந்த மண்
வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் ரத்தம் சிந்திய மண்
மதுரை ஸ்ரீ. ராஜகோபால்ஜி அவர்கள் தன்னையே பலியாக்கிய மண்
ஐயா தாணுலிங்க நாடார் அவர்கள் தெருத் தெருவாக சென்று இயக்கத்தை வளர்த்த மண்
இன்னும் பலர் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்த மண்
நம் வருங்கால சந்ததிகள், நம் வீட்டு பெண் குழந்தைகள், நம் சிறார்கள் மானத்துடன் வாழ மதுரையில் சங்கமிப்போம்
வெற்றி வேல் வீர வேல்