மதுரையில் முருக பக்தர் மாநாடு: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

0

மதுரையில் முருக பக்தர் மாநாடு: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மதுரையில் நடைபெற்று வரும் முருக பக்தர் மாநாட்டில், அறநிலையத் துறை கோயில்களில் இருந்து விலக வேண்டும் என்பதோடு கூடிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாடு, தமிழக இந்து முன்னணியின் தலைமையில் மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் ஜூன் 22 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முருக பக்தர்கள் கீழ்க்காணும் முக்கிய தீர்மானங்களை ஏற்றுக்கொண்டனர்:

  1. கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.
  2. ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிக்காக இந்திய இராணுவத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.
  3. தமிழகத்தில் உள்ள அனைத்து குன்றுகளும் முருகனுக்கே எனக் கருதி அவற்றை பாதுகாக்க வேண்டும்.
  4. அறநிலையத் துறை, தமிழகத்தில் உள்ள தேவஸ்தானங்களிலிருந்து விலக வேண்டும்.
  5. எதிர்வரும் எந்த தேர்தலாக இருந்தாலும், அனைத்து இந்துக்களும் ஒன்றிணைந்து தங்களது வாக்குவலிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
  6. ஒவ்வொரு மாத சஷ்டி நாளிலும் சஷ்டி கவசம் பாராயணம் நடைபெற வேண்டும்.

இந்த தீர்மானங்கள், பக்தர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here